Posts

Showing posts from August, 2021

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 7

Image
அத்தியாயம் - 7 தன் தொழில் தொடர்பில், உருவாகிய எதிரி, தன்னை அழிக்க வல்ல பொறிகளை ஆராய்ந்து, திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத அனு, தன் வேலைகளை செவ்வனே நடத்திக் கொண்டிருந்தாள். ஹரிஷிடம் கூறியதுப் போல, இரு நாட்கள் கழித்து, அவனோடு வெளியே செல்வதால், இன்று முக்கியமான விடயத்துக்காக, அபாயம் இருந்தாலும், துணிந்து செயலாற்ற வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து, செயலில் இறங்கினாள். "ஆன்ட்டி, என் வேலை விஷயமா வெளியேப் போறேன்... வர எப்படியும் லேட்டாகும்.. அண்ட் போன் சைலெண்ட்ல போட்டிருப்பேன்.. கூடுமான வரைக்கும் எனக்கு கால் பண்ணிடாதீங்க" என்று அனு, கூறியபடியே வெளியே செருப்பை மாட்ட,  சாரதா, "பார்த்து பத்திரமா இரு.. ஜாக்கிரதை.. பெப்பர் ஸ்பிரே.. ஸ்டன் கன் எல்லாம் எடுத்துக்கிட்டியா?" என்று எச்சரிக்கை கலந்த கவலையுடன் வினவ, அவளோ சிரித்தாள். "ஐயோ ஆன்ட்டி, இத்தனை வருஷம் என்னை நானே தான் பாத்துக்கிறேன்.. இனிமேலும் அப்படித் தான்.. அதனால, அனாவசியமா கவலைப்படாம இருங்க..." என்றவள், மாலையில் கிளம்பிவிட்டாள்.  அவள் கிளம்பிய ஒருமணி நேரத்தில், வீடு வந்து சேர்ந்தான் யாழ். தன்னை ஆசுவாச...

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 6

Image
அத்தியாயம் - 6 அவர்கள் ஆடர் செய்த உணவுகள் மேஜையில் வரிசைப்படுத்தி வைத்து விட்டு, அவன் கையில் இருந்த மீதி உணவுகளோடு, அடுத்த மேஜைக்கு நகர்ந்து சென்றான் பரிசாரகன்.  யாழினியன் தனக்கு வேண்டிய உணவுகளை சுவைப் பார்க்க, அனு தான் ஆர்டர் செய்த தந்தூரி சிக்கனை வாயில் வைத்த சில வினாடிகளில், 'உஸ்', 'உஸ்' என்று வாயை குவித்து, ஊத, யாழினியன், அவளுக்கு காரம் தாங்கவில்லை என்று உணர்ந்து, அவனும் அதனை எடுத்து வாயில் போட்டான்.  போட்டதில், காரத்தை உணர்ந்து அவன் தண்ணியை குடித்து நாக்கை குளிர வைக்க, அப்போது பக்கத்து மேஜையில் சத்தம் ஓங்கி கேட்டது. அவர்கள் உணவில் உரைப்பு மிகவும் கம்மியாக இருப்பதாக புகார் தெரிவிக்க, பரிசாரகனை அழைத்தான் யாழினியன். உணவு தட்டு மாறிவிட்டதாகக் கூறி, அவர்களை சாந்தப்படுத்த விழைந்தான்.  இங்கே அனுவோ, மொடாக் மொடாக் என, தண்ணீரை குவளை குவளையாக, தொண்டைக்குள் இறக்கினாள் ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.  அவளை பார்ப்பதற்கே பாவமாக தோன்றியது அவனுக்கு. உதடு சிவக்க, கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. உணவை பார்சல் செய்து தருமாறு கேட்டவன், பில்லை செலுத்தி விட்டு, அவளை அழைத்துக் கொ...