Posts

Showing posts from July, 2021

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 5

Image
அத்தியாயம் - 5 "அனு.. உன்கிட்ட ரொம்பவே முக்கியமான விஷயம் பேசனும்" என்று சாரதா கூறவும்,  அனுவும், "என்ன ஆன்ட்டி" என்று கேட்டாள். கூடவே, நடந்த திருமணத்தைப் பற்றி தான் கேட்கப் போகிறாரோ?! என்கிற ஐயமும் மனதுள் தோன்றியது. "யாழ்க்கு உன்னோட நடந்தது விருப்பமில்லாத கல்யாணம் தான். அதுவும் என்னோட கண்டிஷனால தான், அவன் ஒத்துக்கிட்டான்னும் எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா அவனோட இயலாமையைக் காரணம் காட்டி உன் மேல கோபப்படலையே?" என்று கவலையுடன் வினவியரை, குழப்பத்துடன் நோக்கினாள். "அப்படி எதுவுமே இல்லை ஆன்ட்டி.. எனக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்து செஞ்சுக் கொடுத்தான். என் கூட ஷாப்பிங் வந்து ட்ரெஸ் செலக்ட் பண்ணிக் கொடுத்தான்" என்று உண்மையும் பொய்யும் கலந்துக் கூறியவள்,  மாமியாரை தலை சாய்த்துப் பார்த்து, குறும்புடன், "அப்படியே அவன் கோபப்பட்டாலும், இன்னும் என்னை எதற்கெடுத்தாலும் அழற உங்க அனுக்குட்டி ன்னு நினைச்சீங்களா? நோ நெவர்.. இந்த அனுக்கு நல்லாவே வம்பும் சண்டையும் போடத் தெரியும்..." என்று கூறினாள். "ஓ.. அப்ப எனக்கு பக்கா என்டர்டைன்மெண்ட் இருக்கு ன்னு ...

கல்யாண சம்பந்தம் அத்தியாயம் 2

அத்தியாயம் - 2 அம்மா அம்மா... அம்மாஆஆஆ" "ஏன்டா ஏலம் போடற..? இங்க தான இருக்கேன்..." "அப்ப ஒரு தடவை கூப்பிட்டதுக்கே, 'என்ன' ன்னு கேட்டிருக்க வேண்டியது தானே...??" "ஆமா நீ கூப்பிடறது எருமை மாடு,  'ம்ம்மா' ன்னு கத்தின மாதிரியே இருந்துச்சு டா.. அதான் எனக்கு ஒரு டவுட்ல (doubt) திரும்பி என்னன்னு கேட்கலை... இப்ப சொல்லு எதுக்கு கூப்பிட்ட??" என்று மகனை கேலி செய்துவிட்டு, எதுக்கு அழைத்தான் என்றும் கேட்டார். "சந்தடி சாக்குல என்னை எருமை மாடு ன்னு திட்டிட்டு, ஒன்னுமே தெரியாத மாதிரி என்னன்னு கேட்கிற... நீ சீரியல் பார்த்து பார்த்து நல்ல நடிக்க கத்துக்கிட்ட அம்மாவ்" என்க, "ஐயையோ மறந்தே போயிட்டேன்... " என்று பதறியடித்து ஹாலுக்கு நகர்ந்தவரை, தடுத்து என்னவென்று விசாரித்தான் மகன். அவரின் தவிப்பு அவனுக்கு கிலியை கொடுதத்ததோ...!! "என்னமா என்ன ஆச்சு.??. நீ ஏதோ மறந்த விஷயம் உனக்கு ஞாபகம் வந்துருச்சா" என்று பதற, "ஆமா டா.. 'அவள் மென்மையானவள்' ன்னு ஒரு சீரியல்.. ஏற்கனவே பத்து நிமிஷம் போயிடுச்சு.. என்னங்க அடுப்புல சாம்பார் ...

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் - 4

Image
அத்தியாயம் - 4 விமானம் இரண்டரை மணிநேரத்தில் சென்னையில் தரை இறங்கியது. உள்நாட்டு விமானம் என்பதால், குறைந்த அளவிலான பரிசோதனை முடிந்து, தங்கள் உடமைகளை கன்வேயரில் இருந்து எடுத்துக் கொண்டு, வெளியே வந்தனர். அவர்கள் வெளியே செல்ல, அனுலேகாவிற்கு, அலைபேசி தான் இருப்பதை உணர்த்த, எடுத்து யாரென்று பார்த்தவள், ஒரு நொடி திடுக்கிட்டாள். ஏனென்றால், அழைத்தது அனு என்கிற ஐஷ்வர்யா. உடனே, யாழினியன் கண்டு விடாமல், அலைபேசி ஒலியை  அமைதிப்படுத்தி, தன் ஜீன்ஸினுள் திணித்தாள். அவனோ, அவளை விசித்திரமாகப் பார்த்து, "ஏன் ஃபோனை எடுக்க வேண்டியது தானே?" "அது.. இல்ல எனக்கு பொது வெளியில் ஃபோன் பேசிப் பழக்கமில்ல.. நான் ரூமுக்குப் போய் பேசிக்கிறேன்" என்றதும், அவளை மேலும் கீழுமாக ஆராய்ந்து நோக்கினான். "அப்ப நான் கிளம்பறேன்.. இது தான் என் ஹாஸ்டல் அட்ரஸ்" என்று ஒரு சின்ன தாளில், தன் அலைபேசி எண்ணையும், முகவரியையும் குறித்துக் கொடுத்தாள். அதனை கையில் வாங்கியவன், அந்த தாளில் பார்வையை ஓடவிட்டாலும், அதே கணம், அவளின் கையைப் பிடித்து அவள் செல்வதைத் தடுத்து நிறுத்தினான். அவனின் தொடுகையை உணர்ந்தவள், ஆச்சரிய...

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 3

Image
அத்தியாயம் - 3 அனுலேகா தனியே சுற்றிப்பார்க்க வெளியே செல்ல, அவளை யாரோ பின்தொடர்வது போல உள்ளுணர்வு தோன்ற, திரும்பிப் பார்க்காமல் நேரே அறைக்கு செல்ல நடந்தாள். ரிசார்ட்டை நெருங்கும் போது, அவளின் எதிரே, அவளின் ஆருயிர் இல்லா கணவன் அவளை நோக்கி நடந்து வர, அதனை சாக்காக பிடித்துக் கொண்டாள். "என்னை பிரிஞ்சுக் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியலையா ஹார்ப் (யாழ் - தமிழ் இசைக்கருவி)" என்று அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு திரும்பி, யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டாள். "ஏய் என்ன பண்ற... தள்ளி போ... நானா உன்னை தள்ளிவிட்டா உனக்கு தான் அசிங்கம்" என்று அடிக்குரலில் வார்த்தைகளை கடித்துக் குதறினான். அதற்குள் அவளும் யாரும் தன்னை இப்போது தொடரவில்லை என்று அறிந்து, அவனை விட்டு விலகினாள். "உன்னை கட்டிப்பிடிக்க நான் ஒன்னும் இங்க காத்துட்டு இல்ல. என்னை யாரோ ஃபாலோ பண்ண மாதிரி இருந்துச்சு. அதான் என் கூட ஒருத்தர் துணைக்கு இருக்கான்னு தெரிஞ்சா, திரும்பி போயிடுவாங்க ன்னு நினைச்சேன்.. நான் நினைச்ச மாதிரியே யாரும் அங்க இல்ல.. எனிவே தேங்க்ஸ்.." என்று விலகி அறைக்கு செல்ல எத்தனித்தாள் அவள் ச...